டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை இவ்வருடத்தில் 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தகவல்

🕔 July 14, 2024

ந்த வருடம் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30,000 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜூலை 13 நிலவரப்படி, 2024 இல் மொத்தம் 30,057 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை 6,910 ஆகும்.

மேல் மாகாணத்தில் 11,661 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை மாதத்தில் 1,818 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இது மாகாண ரீதியான அதிகபட்ச தொகையாகும்.

இலங்கையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கணிசமான மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், டெங்குவைத் தடுக்கும் வகையில் சுற்றுப்புறங்களைச் சுத்தமாக வைத்திருக்குமாறும், நுளம்புகள் பெருகும் இடங்களை அழிக்குமாறும் மக்களுக்கு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்