நெடுஞ்சாலைகளில் சுமார் 16 கோடி ரூபாய், மூன்று நாட்களில் வருமானம்

🕔 April 15, 2024

திவேக நெடுஞ்சாலைகளின் நுழைவுக் கட்டணமாக ஏப்ரல் 10 முதல் 13 வரையிலான மூன்று நாட்களில், 15 கோடியே 98 லட்சத்து 2,950 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக, வீதிப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேற்படி காலப் பகுதியில் 43 லட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தியுள்ளதாக, அதிவேக நெடுஞ்சாலை இயக்க பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.ஏ.டி. கஹடபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை 13ஆம் திகதி சனிக்கிழமையன்று மட்டும் – நெடுஞ்சாலைகளின் வருமானமாக 02 கோடியே 46 லட்சத்து 70 ஆயிரத்து 400 ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்