சங்கமன் கிராமத்தில் யானை உடைத்த வீடு: உரியவர்களிடம் முறையிட்டும் யாரும் வரவில்லை என புகார்

🕔 April 4, 2024

திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சங்கமன் கிராமத்தில் வயோதிப தம்பதியினரின் வீடொன்று, கடந்த 01ஆம் திகதி அதிகாலை – யானையின் தாக்குதலுக்கு உள்ள நிலையில், அது குறித்து பொலிஸ் மற்றும் கிராம அதிகாரியிடம் முறையிட்டும் இதுவரை யாரும் களத்துக்கு வருகை தரவில்லை தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீட்டை யானை தாக்கிய தினம், அங்கு வசிக்கும் வயதான கணவன் – மனைவி இருவரும் தங்கள் மகளின் வீட்டுக்கு சென்றிருந்தனர். இந்த நிலையில் – வீட்டை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த கச்சான் மற்றும் நெல் ஆகியவற்றை யானை உட்கொண்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வீட்டு உரிமையாளர் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதோடு, கிராம அதிகாரியிடமும் விடயத்தை தெரிவித்துள்ளார். ஆயினும், இதுவரை எவரும் யானை உடைத்த வீட்டை வந்து பார்வையிடவில்லை என, வீட்டு உரிமையாளரின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் யானையின் தாக்குதலுக்குள்ளான வீடு எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடும் எனும் அச்சத்தில், தற்போது வீட்டு உரிமையாளர்கள் தமது மகனின் வீட்டில் தங்கியுள்ளனர்.

Comments