‘அபே ஜன பல’ கட்சி தலைவர் உள்ளிட்ட 05 பேர் கொலையின் பிரதான சந்தேக நபருடைய மனைவி, தந்தை கைது
‘அபே ஜன பல’ கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 05 பேர் பெலியத்த பகுதியில் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபரின் மனைவி மற்றும் தந்தையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வைத்து கைது செய்துள்ளனர்.
பெலியத்த துப்பாக்கிச் சூட்டின் பிரதான துப்பாக்கிதாரி முன்னாள் கடற்படை உத்தியோகத்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரின் மனைவியும் (39 வயது) கடற்படையில் பணியாற்றியவராவார். அவரும் சந்தேக நபரின் 72 வயது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 21 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயினுடன் பல்லேவெல பிரதேசத்தில் பதகம என்ற இடத்தில் தலைமறைவாக இருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.