இணையவழி பாதுகாப்புச் சட்டம், இன்று தொடக்கம் நடைமுறைக்கு வருகிறது: கையெழுத்திட்டார் சபாநாயகர்

🕔 February 1, 2024

நாடாளுமன்றத்தால் கடந்த வாரம் அங்கிகரிக்கப்பட்ட இணையவழி பாதுகாப்புச் சட்டமூலத்தை சபாநாயகம் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (01) சான்றுப்படுத்தி கையெழுத்திட்டார்.

அதன்படி, இந்த சட்டமூலம் 2024 ஆம் ஆண்டின் இணையவழி பாதுகாப்புச் சட்டம் எண் 09 எனும் பெயரில் நடைமுறைக்கு வரும்.

இரண்டு நாள் விவாதத்துக்குப் பின்னர், சபையில் வாக்கெடுப்பு இல்லாமல் மேற்படி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இதன் போது இந்த சட்டமூலத்தின் பிரிவுகள் கருத்துச் சுதந்திரத்தை மீறுவதாகக் கூறி எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்த்தன.

இரண்டாம் வாசிப்பின் போது, சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 பேரும், எதிர்த்து 62 பேரும் வாக்களித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்