அபே ஜனபல கட்சி தலைவைர் உள்ளிட்ட ஐவர், துப்பாக்கிச் சூட்டில் பலி
‘அபே ஜனபல கட்சி’ தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 05 பேர், இன்று (22) தங்காலை – பெலியத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரபல பௌத்த பிக்குகளான அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் கலகொடத்தே ஞானசார தேரர் ஆகியோர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் சமன் பெரேராவின் ‘அபே ஜனபல கட்சியின்’ கீழ் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை வென்றனர்.
இன்று (22) காலை 8.30 முதல் 8.40 மணிக்குள் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது, சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர்.
ஒருவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
வெள்ளை நிற டிஃபென்டர் ரக வாகனத்தில் பயணித்த 5 பேரை இலக்கு வைத்து பச்சை நிற கெப் வண்டியில் வந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.