‘ஐஸ்’ போதைப்பொருளுடன் புத்தளத்தில் வத்தளைப் பிரதேச நபர் கைது

🕔 January 14, 2024

மூன்று கிலோகிராம் எடையுள்ள ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) வைத்திருந்த நபர் ஒருவர் புத்தளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

‘யுக்திய’ எனும் – போதைப்பொருளுக்கு எதிரான விசேட பொலிஸ் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 30 வயதுடைய நபர் நேற்று (13) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்படும் போது, அவர் – கொழும்பு நோக்கி பொதுமக்கள போக்குவரத்து பஸ்ஸில் பயணித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபர் இன்று (14) புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்