ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பதவியிலிருந்து வடிவேல் சுரேஷ் நீக்கம்
நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக அவர் வாக்களித்திருந்தார்.
இதனையடுத்து அந்த இடத்துக்கு லெட்சுமணன் பசறை அமைப்பாளராக சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து லெட்சுமணன் சஞ்சய் நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
“பதவியை ஏற்றுக்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் பசறையில் உள்ள இளைஞர்களுக்காக பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன். விரைவில் அரசியலில் இளைஞர்கள் முக்கிய இடத்தைப் பெறுவார்கள்” என, அமைப்பாளர் நியமனத்தைப் பெற்றுக் கொண்ட லெட்சுமணன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.