“பூமியில் நரகம் என்றால் அது வடக்கு காஸா”: ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அலுவலகம் அறிக்கை
காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,078 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 4,506 பேர் சிறுவர்களாவர்.
இதேவேளை காஸவிலுள்ள பல வைத்தியசாலைகளை இஸ்ரேலிய கவச வாகனங்கள் சூழ்ந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். பல வைத்தியசாலைகள் மீது குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணமாக – காஸா முழுவதும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளன.
“பூமியில் நரகம் என்றால் அது வடக்கு காஸா” என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வடக்கு காஸாவில் இருந்து பலஸ்தீனர்கள் வெளியேறுவதற்கு – இஸ்ரேல் தினசரி நான்கு மணி நேர – தாக்குதல் இடைநிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக ‘வெள்ளை மாளிகை’ தெரிவித்துள்ளது.