ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 24 மணி நேரத்தில் 04 சிறுவர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொலை

🕔 October 19, 2023

க்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலியப் படைகள் நான்கு பாலஸ்தீனச் சிறுவர்களை சுட்டுக் கொன்றுள்ளதாக பலஸ்தீனிலுள்ள சிறுவர்கள் பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பு (Defense For Children International-Palestine) தெரிவித்துள்ளது.

15 முதல் 17 வயதுக்குட்பட்ட இரு சிறுவர்கள் புதன்கிழமை பிற்பகல் கொல்லப்பட்டதாகவும், மற்ற இருவர் இன்று (19) அதிகாலையில் கொல்லப்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

கலீல் முகமது கலீல் ஷலாஷ் (15 வயது), கைஸ் முகமது ஹசன் ஷலாஷ் (17 வயது), அஹ்மத் முனிர் யூசுப் ஸ்டூக் (17 வயது), மற்றும் தாஹா இப்ராஹிம் முகமது மஹ்மீத் (15 வயது) ஆகிய சிறுவர்களே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

“இஸ்ரேலியப் படைகள் மேற்குக் கரை முழுவதும் பாலஸ்தீன குழந்தைகளை அதிகளவிலும் வெட்கக்கேடான முறையிலும் கொன்று வருகின்றன” என்று மேற்படி அமைப்பின் பொறுப்புக்கூறல் திட்டப் பணிப்பாளர் ஆயத் அபு எக்தைஷ் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த நேரத்தில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எந்தவிதமான தடையும் இல்லை. ஏனெனில் சர்வதேச சமூகம் ஆயுதங்கள் மற்றும் நிதி மற்றும் ராஜதந்திர உதவிகளை வழங்குவதன் மூலம் போர்க்குற்றங்களை செயல்படுத்துகிறது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்