மூன்று மாவட்ட விவசாயிகளுக்கு உரம் வழங்க நடவடிக்கை

🕔 October 12, 2023

பெரும்போகத்தில், மரக்கறி மற்றும் ஏனைய பயிர்ச் செய்கையில் ஈடுபடும் 3 மாவட்டங்களை சேர்ந்த மூவாயிரம் விவசாயிகளுக்கு உரத்தை வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, விவசாயி ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உரத்தை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டம் மாத்தளை, குருணாகல், மொனராகலை ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்படவுள்ளது.

ஒரு ஹெக்டெயருக்கு குறைவான நிலத்தில் காய்கறிகள் மற்றும் பிற பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கே இவ்வாறு உரம் வழங்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்