க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி பற்றிய அறிவிப்பு
க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதியை ஒக்டோபர் முதல் வாரத்தில் கல்வி அமைச்சு அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் ஒக்டோபர் 02 ஆம் திகதி அறிவிக்கப்படும் என, கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க கூறியுள்ளார்.
திட்டமிடப்பட்ட 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் பிற்போடப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
பரீட்சைகளை நடத்துவதற்கான திருத்தப்பட்ட திகதியினை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பார் என அமைச்சர் அப்போது குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நொவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெறவிருந்தன.
இருந்தபோதிம், மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டன.