நான்கு கடவுச்சீட்டுகளுடன் விமான நிலையத்தில் புத்தளம் பெண் கைது

🕔 August 21, 2023

ந்தியாவில் இருந்து கொண்டு வந்த புடவைகளில் 04 கடவுச்சீட்டுகளை மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள், அவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பயணி புத்தளம் கல்பிட்டி பகுதியை சேர்ந்த 48 வயதான வர்த்தக பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் இன்று (21) அதிகாலை 04.41 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் – விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்வதற்காக குறித்த பெண் கடவுச்சீட்டுகளை மனித கடத்தல்காரர்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வந்த 04 கடவுச்சீட்டுகளுடன்,விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்