பெண்ணொருவரைத் தாக்கி, கைவிலங்கிட்டு இழுத்துவந்த பொலிஸ் சார்ஜன்ட் கைது

🕔 July 17, 2023

பெண் ஒருவரை கைவிலங்கிட்டு தாக்கி இழுத்துச் சென்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை பிரதான வீதியில் நேற்று (16) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட தகராறில் குறித்த பெண்ணை பொலிஸ் சார்ஜன்ட் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணை பொலிஸ் சார்ஜன்ட் தாக்கிய பின்னர் – அவரைக் கைவிலங்கிட்டு வத்தளை பொலிஸ் நிலையத்துக்கு இழுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது, பெண்ணின் நெற்றியில் இருந்து இரத்தம் கசிவதைக் கண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் – கறுவாத்தோட்டம் பொலிஸில் விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

கடமை முடிந்து வீடு திரும்பும் வேளையிலும், உத்தியோகபூர்வ சீருடையில் இருந்த போதும் குறித்த பெண்ணை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்