மஹிந்த அணியின் புதிய கட்சி, சுதந்திர தினத்தில் அறிமுகமாகிறது

🕔 January 23, 2016

Mahinda - 055முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பின்னணியில் உருவாகுவதாகக் கூறப்படும் புதிய கட்சி பற்றிய அறிவிப்பு, எதிர்வரும் பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியின் பெயர் சின்னம் குறித்து அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றும் அறிய முடிகின்றது.

முன்னதாக, புதிய கட்சிக்கு தாமரைப் பூவினை சின்னமாக கோரியயிருந்தனர். எனினும் தேர்தல்கள் ஆணையாளர் அதனை வழங்க மறுத்தமையினால், தாமரை மொட்டு சின்னத்தில் கட்சி செயற்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்தக் கட்சிக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராபக்ஷ தலைவராக செயற்படுவார் என்றும் தவல்கள் குறிப்பிடுகின்றன.

முன்னாள் ஜனாதிபதியின் முழுமையான ஆதரவுவும் ஒத்துழைப்பும் புதிய கட்சிக்கு உள்ளதாகவும் அறிய முடிகிறது. இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சுத்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 70 உறுப்பினர்களின் ஆதரவு, புதிய கட்சிக்கு  கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்