ஓய்வு நிலைக்குச் சென்ற பொலிஸ் மா அதிபருக்கு பதவி நீடிப்பு

🕔 July 9, 2023

திவிக்காலம் நிறைவடைந்த நிலையில் ஓய்வு நிலைக்குச் சென்ற பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெற்றிடமாகவுள்ள பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் இன்று (09) முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போதே, சி.டி. விக்ரமரத்னவின் பதவி காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் சேவைக்காலம் கடந்த 26ஆம் திகதி நிறைவடைந்ததையடுத்து, பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாகவே இருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்