திருமணத்துக்கு மறுத்த காதலன் கடத்தல்: சினிமா பாணியில் அதிரடி காட்டிய பாதுகாப்பு படையில் பணியாற்றும் பெண்

🕔 July 5, 2023

பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் ஒருவருடனான காதல் உறவை முறித்துக் கொண்ட இளைஞன் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் உட்பட நால்வர் இன்று (05) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (04) மாலை அலுபோமுல்ல – பின்வத்த பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர்களால் இளைஞன் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

சம்வம் தொடர்பில் இளைஞரும் அவரின் தாயாரும் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட இளைஞனும், அவரைக் கடத்தியதாகக் கூறப்படும் பாதுகாப்புப் படைப் பெண்ணும் தொடர்பு வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் குறித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள இளைஞன் மறுத்ததால் அவர் கடத்தப்பட்டுள்ளார்.

கைவிடப்பட்ட வீடொன்றில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் மேற்படி இளைஞரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி மற்றும் அதன் சாரதி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபர்கள் இன்று (05) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்