பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தேரர் ஒருவர் கைது

🕔 May 29, 2023

பௌத்த மதத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டின் பேரில் ராஜாங்கனே சத்தாாரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டார் என, இவருக்கு எதிராக மற்றொரு பௌத்த பிக்கு முறையிட்டிருந்தார்.

அதற்கமைய இன்று (29) அதிகாலை அனுராதபுரத்தில் வைத்து ராஜாங்கனே சத்தாரத்ன தேரரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.

பஹியங்கல ஆனந்த சாகர தேரர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், பௌத்த மதத்திற்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையிலும் ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் கருத்து வெளியிட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்