கொவிட் காரணமாக இறந்தவர்களின் இறுதிக் கிரியைகள் தொடர்பில், ஹக்கீம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கெஹலிய பதில்

🕔 April 28, 2023

கொவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்த 3,634 பேர் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புவெல்ல தெரிவித்தார். அதேவேளை, அப்போதைய அரசாங்கம் இனவாதத்தை ஒருபோதும் கையில் எடுக்கவில்லை எனவும் நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.

மு.கா. தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம் சபையில் எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல; கொவிட் – 19 நோயாளர்களின் இறுதிக் கிரியைகள் தொடர்பான பிரச்சினையை ஆராய நியமிக்கப்பட்ட செயலணியின் உறுப்பினர்களை, அரசாங்கம் உள்நோக்கத்துடன் தெரிவு செய்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்தார்.

“செயலணியில் ஒரு நபர் மட்டுமே கோவிட் -19 க்கு அடிபணிந்தவர்களை அடக்கம் செய்வதற்கு எதிராக இருந்தார். எனவே, உங்கள் குற்றச்சாட்டை என்னால் ஏற்க முடியாது” என்று அமைச்சர் இதன்போது கூறினார்.

ஓட்டமாவட்டியில் 2,992 முஸ்லிம்கள், 287 பௌத்தர்கள், 270 இந்துக்கள் மற்றும் 85 கத்தோலிக்கர்கள் என, 2,225 ஆண்களும் 1,409 பெண்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்