நாட்டு மக்களுக்கு நாளை முதல் இலவச அரிசி விநியோகம்: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

🕔 March 26, 2023

நாட்டில் 2.9 மில்லியன் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் வேலைத்திட்டம் நாளை (27) ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த பெரும்போகத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை – அரிசியாக மாற்றி விநியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் 02 மாதங்களுக்கு தலா 10 கிலோகிராம் இலவச அரிசி வழங்க – அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் கூறியுள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, ரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கோரிக்கைகளுக்கு அமைய இந்த இலவச அரிசி விநியோகம் இடம்பெறும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்