காவலரைக் கட்டிப்போட்டு விட்டு, ஏ.ரி.எம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: கம்பளையில் சம்பவம்

🕔 January 25, 2023

ங்கி ஏ.ரி.எம் இயந்திரத்தை கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ள சம்பவமொன்று கம்பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கம்பளை கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் ஏ.ரி.எம் இயந்திரமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

முகமூடி அணிந்த நால்வர் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளர்.

வேன் ஒன்றில் வந்த கொள்ளையர்கள், அங்கிருந்த காவலாளியை கட்டி போட்டுவிட்டு, ஏ.ரி.எம் இயந்திரத்தை அகற்றிச் சென்றுள்ளனர்.

கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வேன் – பேராதனையில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது வேன் சாரதி உள்ளே கட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்