குமார வெல்கம, சம்பிக்க ரணவக்க தரப்பு, தேர்தலில் இணைந்து போட்டியிடும் ஒப்பந்தத்தில் கைச்சாத்து

🕔 January 16, 2023

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான ‘நவ லங்கா சுதந்திரக் கட்சி’யும், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ’43 ஆவது படையணி’யும் எதிர்வரும் உள் ளூராட்சி மன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர.

இதேவேளை உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் 43 ஆவது படையணியை அரசியல் கட்சியாக மாற்ற எதிர்பார்த்துள்ளதாக, சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

“நாங்கள் இந்த 43 வது படைப்பிரிவை ஒரு அரசியல் கட்சியாகவோ அல்லது தேர்தலை இலக்காகக் கொண்டோ உருவாக்கவில்லை. நாடு கடந்த ஆண்டு திவாலான பிறகு – 43ஆவது படையணியை அரசியல் கட்சியாக மாற்ற முடிவு செய்தோம்.

ஆனால், நேரம் அதற்கு அனுமதிக்கவில்லை. 43வது படைப்பிரிவை மாற்றுவோம் என்று நம்புகிறோம். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு ஒரு அரசியல் கட்சியாக மாற்றுவோம் என நம்புகிறோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்