தேசிய, சர்வதேச ரீதியில் கராத்தே போட்டிகளில் வென்றோருக்கு ‘வர்ண’ விருது

🕔 December 25, 2022

– எம்.என்.எம். அப்ராஸ் –

ங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச கராத்தே போட்டிகளில் 2015 தொடக்கம் 2021 வரைக்குமான காலப்பகுதியில் பதக்கங்களைப் பெற்றவர்களுக்கு ‘வர்ண’ விருது வழங்கும் விழா, சாய்ந்தமருது அல் – ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் நேற்று (24) நடைபெற்றது.

கிழக்கு மாகாண கராத்தே சம்மேளன தலைவர் முகம்மது இக்பால் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில், பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் கலந்துகொண்டார்.

கிழக்கு மாகாணம் சார்பாக வெற்றிபெற்ற 82 வீரர்களுக்கு வர்ண விருது வழங்கப்பட்டதுடன்,கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தில் நீண்ட காலங்களாக சேவையாற்றி வருகின்ற சிரேஸ்ட போதனாசிரியர்கள் ஐந்து பேருக்கு அதி சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.

மேலும், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களைப் பெற்றுத்தந்த சங்கங்களின் எட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு விசேட பாராட்டு விருதுகள் இதன்போது வழங்கப்பட்டன.

இவ்விழாவில் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம். மாஹிர், தென்கிழக்கு பல்கலைக்கழக உடற்கல்வி பொறுப்பாளர் தாஹிர், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே. ஈஸ்வரன், கிழக்கு மாகாண கராத்தே சம்மேளன செயலாளர் எஸ். மனோகரன், அம்பாறை மாவட்ட கராத்தே சம்மேளன தலைவர் கே. கிருஷ்ணமூர்த்தி, திருகோணமலை மாவட்ட கராத்தே சம்மேளன தலைவர் டி.எப். அலோசியஸ், மட்டக்களப்பு மாவட்ட கராத்தே சம்மேளன தலைவர் சிஹான் கே.குககுமாரராஜா, அம்பாறை மாவட்ட முன்னாள் விளையாட்டு அதிகாரி ஐ.எம். நபார் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில்IMA, RKOஆகிய சங்கங்களின் மாணவர்களினால் கராத்தே கண்காட்சிகளும் நடத்தப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்