நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலுள்ள மின் பிறப்பாக்கி ஒன்றை நிறுத்தத் தீரமானம்

🕔 December 23, 2022

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள மின் பிறப்பாக்கி ஒன்றை நிறுத்துவதற்கு இன்று (23) தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்படி, குறித்த மின் பிறப்பாக்கியை செயலிழக்கச் செய்வதன் மூலம் இழக்கப்படும் 300 மெகாவோட் மின்சாரத்தை, கெரவலப்பிட்டிய அனல்மின் நிலையத்தில் இருந்து பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் நுரைச்சோலை மின் பிறப்பாக்கி இயந்திரத்தை செயலிழக்கச் செய்து, கெரவலப்பிட்டி அனல்மின் நிலையத்திலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அதிக செலவாகும்.

ஆயினும் தினசரி இரண்டு மணிநேரம் 20 நிமிட மின்வெட்டுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்