போதைப் பொருள் பாவித்த குற்றத்துக்காக 05 ஆயிரம் மாணவர்கள் சிறையில்

🕔 December 22, 2022

போதைப்பொருள் பாவித்த குற்றத்துக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 5000 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த மாணவர்களில்சாதாரண மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களும் அடங்குகின்றனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

2015 ஆம் ஆண்டில், பாடசாலைக்கு செல்லாத கிட்டத்தட்ட 600 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், இது 2021 இல் 190 ஆகக் குறைந்துள்ளது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இருப்பினும், சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

2015ல் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2,000 ஆக இருந்ததுடன் 2021 ஆம் ஆண்டு ஆகும் போது 5000 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் 2020 ஆம் ஆண்டு 22 பட்டதாரிகள் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்