டயானாவுக்கு எதிராக லஞ்ச, ஊழல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
சுற்றுலா ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.
சமூக ஊடக ஆர்வலர் ஓஷல ஹேரத் இன்று (20) இந்தக் குற்றச்சாட்டைப் பதிவு செய்தார்.
டயானா கமகேவுக்கு குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ராஜதந்திர கடவுச்சீட்டுக் குறித்து இந்தப புகார் அளிக்கப்பட்டுள்ளது.
டயானா கமகே பிரித்தானிய குடியுரிமையை கொண்டுள்ளதாகவும், அவருக்கு ராஜதந்திர கடவுச்சீட்டை வழங்குவது குடிவரவு – குடியகல்வுச் சட்டத்தை மீறும் செயற்பாடாகும் என, தனது முறைப்பாட்டில் ஓஷல ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதை சுட்டிக்காட்டியுள்ள ஓஷல ஹேரத், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு ஆணைக்குழுவைக் கோரியுள்ளார்.