டயானாவுக்கு எதிராக லஞ்ச, ஊழல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

🕔 December 20, 2022

சுற்றுலா ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.

சமூக ஊடக ஆர்வலர் ஓஷல ஹேரத் இன்று (20) இந்தக் குற்றச்சாட்டைப் பதிவு செய்தார்.

டயானா கமகேவுக்கு குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ராஜதந்திர கடவுச்சீட்டுக் குறித்து இந்தப புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டயானா கமகே பிரித்தானிய குடியுரிமையை கொண்டுள்ளதாகவும், அவருக்கு ராஜதந்திர கடவுச்சீட்டை வழங்குவது குடிவரவு – குடியகல்வுச் சட்டத்தை மீறும் செயற்பாடாகும் என, தனது முறைப்பாட்டில் ஓஷல ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதை சுட்டிக்காட்டியுள்ள ஓஷல ஹேரத், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு ஆணைக்குழுவைக் கோரியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்