சமுர்த்தி பயனாளிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி

🕔 December 20, 2022

முர்த்தி உதவி பெறுவோர் எண்ணிக்கை, 2020ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாகக் குறைந்துள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில் சுமார் 18,10,000 குடும்பங்கள் பயனாளர்களாகக் கருதப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

எனினும், 2020ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு இறுதிவரை, நலத்திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கையில் குறைவைக் காண முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தினால், சமுர்த்தி நலன் பெறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்