தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றோர் தொகை; வரலாற்று பதிவாகியுள்ளது: அமைச்சர் மனுஷ தகவல்

🕔 December 18, 2022

நாட்டிலிருந்து தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றோர் எண்ணிக்கை, வரலாற்றில் இவ்வருடம் அதிகமான இருந்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத்தில் இவ்வருடம் பதிவு செய்து – தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு சென்றோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இன்று (18) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை கூறினார்.

அந்த வகையில் இந்த வருடத்தில்தான் – வரலாற்றில் அதிகளவானோர் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு தொழிவாய்ப்புகளுக்காக சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்