பாடசாலைகளை அண்மித்து நடத்தப்பட்ட சுற்றி வளைப்பில் 75 நபர்கள் கைது: போதைப் பொருட்களும் சிக்கின

🕔 December 17, 2022

பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 75 பேர் மேல் மாகாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

122 பாடசாலைகளை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மாவா, ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை இலக்கு வைத்து சோதனைகள் தொடரும் என பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்