‘அரகலய’ செயற்பாட்டாளர் டிலான் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி

🕔 December 15, 2022

‘அரகலய’ போராட்டக்காரரும் சமூக ஊடக செயற்பாட்டாளருமான டிலான் சேனாநாயக்க கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த டிலான், கால் மற்றும் தோள்பட்டையில் காயமடைந்த நிலையில் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நுகேகொட பாகொட வீதியில் உள்ள ஸ்டுடியோ ஒன்றுக்கு அருகில் வைத்து, இரண்டு நபர்களினால் நேற்று (14) டிலான் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்