அரிசி இறைக்குமதிக்குத் தடை: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது
அரிசி இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பாஸ்மதி அரிசி வகைகளுக்கு இந்த தடை செல்லுபடியாகாது.
அந்த வகையில், பாஸ்மதி ரகம் தவிர்ந்த ஏனைய அரிசிகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 9ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் துறைமுகத்துக்கு அனுப்பப்பட்ட அல்லது கடன் கடிதம் திறக்கப்பட்ட அரிசி இறக்குமதிக்கு சுங்க அனுமதி வழங்கப்படும் என்று வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.