பொருளாதார நெருக்கடி: நகைகளை அடகு வைத்து 190 பில்லியன் ரூபா பணத்தை இவ்வருடம் மக்கள் பெற்றுள்ளனர்

🕔 December 10, 2022

பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வருடத்தின் முதல் 10 மாத காலப்பகுதியில், நகைகளை அடகு வைத்து 193 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணத்தை பல்வேறு நிறுவனங்களில் மக்கள் அடகு வைத்துப் பெற்றுள்ளனர்.

கணக்கெடுப்பில் இந்தத் தகவல் தெரியவந்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரலகூறியுள்ளார்.

தங்க ஆபரணங்களை அடகு வைத்துள்ளவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தினர் என்றும், இந்த பணம் குழந்தைகளின் கல்வி மற்றும் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தனியார் அடமான நிலையங்களை நாடும் போக்கு காணப்படுவதாகத் தெரிவித்த பேராசிரியர், இவை மக்களுக்கு அதிகளவு பணம் வழங்குவதே இதற்குக் காரணம் எனவும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்