அத்தியவசிய உணவுப் பொருட்களின் விலைகளை சதொச குறைத்து அறிவிப்பு
நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைப்பதற்கு அரசுக்குச் சொந்தமான லங்கா சதொச தீர்மானித்துள்ளது.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த முடிவை சதொச எடுத்துள்ளது.
இதன்படி, திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு;
சிவப்பு பச்சை அரிசி: குறைக்கப்பட்ட தொகை ரூ. 6, புதிய விலை – ரூ. 199
கீரி சம்பா : குறைக்கப்பட்ட விலை ரூ. 15, புதிய விலை – ரூ. 225
பெரிய வெங்காயம்: குறைக்கப்பட்டது – ரூ. 30, புதிய விலை – ரூ. 225
நெத்தலிக் கருவாடு: குறைக்கப்பட்டது – ரூ. 150, புதிய விலை – ரூ. 1150