போதைப் பொருளை உட்கொண்டு, வாகனம் ஓட்டுபவர்களை கண்டறியும் வேலைத் திட்டம் விரைவில் ஆரம்பம்

🕔 November 30, 2022

போதைப்பொருட்களை உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறியும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (29)இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ராஜாங்க அமைச்சர், 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றார்.

இதற்காக சுமார் 5000 போதைப்பொருள் பரிசோதனை சாதனங்கள் பொலிஸாருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் – மேல் மாகாணத்தில் கொக்கெய்ன் மற்றும் ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களை உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறியும் நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளோம்” எனவும் அவர் கூறினார்.

போதைப்பொருள் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்த லசந்த அலகியவண்ண, இது சாரதிகளுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றார்.

“முன்னர், போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய மருத்துவப் பரிசோதனைகள் தேவைப்பட்டன. இருப்பினும், தற்போதைய புதிய கருவி மூலம், அந்த இடத்திலேயே சோதனை நடத்தி, இதுபோன்ற ஓட்டுனர்களை கண்டறிய முடியும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் பாவனையினால் வருடத்துக்கு 400 வீதி விபத்துக்கள் பதிவாகின்றன எனத் தெரிவித்த ராஜாங்க அமைச்சர், இதன் தாக்கத்தை குறைக்க விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்