மதத் தலங்களுக்கான மின் கட்டணங்களுக்கு சலுகை, அமுலில் உள்ளதாக அறிவிப்பு
மதத் தலங்களுக்கான மின் கட்டணத்துக்கு வழங்கப்பட்டு வந்த சலுகை – தற்போதும் அமுலில் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சார கட்டணத்தில் சலுகையை உள்ளடக்கும் வேலைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறியுள்ளார்.
அதன்படி, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் ஓகஸ்ட் மாதம் தொடக்கம் நிவாரணம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதத் தலங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மின் கட்டணச் சலுகை, சில காலம் ரத்தாகியிருந்த நிலையில், மேற்படி விடயத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தொடர்பான செய்தி: தலதா மாளிகைக்கு, முதன் முதலாக மின்சாரக் கட்டணப் பட்டியல்: அரைவாசித் தொகையாக 1.3 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டதாக தெரிவிப்பு