02 லட்சத்து 30 ஆயிரம் பேர் , இந்த வருடம் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்

🕔 October 8, 2022

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்று இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 02 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நாட்டை விட்டுச் சென்றுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடக பேச்சாளர் ஜீ.எஸ். யாப்பா தெரிவித்துள்ளார்.

இதில் பெரும்பலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கே சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலானோர் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.

அதேநேரம், ஜப்பானிலும் பலருக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடக பேச்சாளர் ஜீ.எஸ்.யாப்பா தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளமை காரணமாக, அரச தொழிலாளர்களும் சம்பளமில்லாத விடுமுறையைப் பெற்றுக் கொண்டு, வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்