வெறிநாய் கடி நோயால், இரண்டு வயதுக் குழந்தை பலி

🕔 September 25, 2022

வெறிநாய் கடி நோயால் (Rabies) வாரியபொல கனத்தேவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி வெறிநாய் ஒன்று மேற்படி குழந்தையை கடித்துள்ளதுடன் அவரின் வீட்டிலிருந்த நாயையும் கடித்துள்ளது.

அந்த நாய் வெறி நாயாக இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை அடுத்து, தடுப்பூசி போடுவதற்காக குழந்தையின் பெற்றோர் வாரியபொல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் வாரியபொல வைத்தியசாலையில் வெறிநாய்க் கடி தடுப்பூசி கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பெற்றோர் குழந்தையை நிக்கவெரட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று செப்டெம்பர் 4, 7 மற்றும் 11 ஆம் திகதிகளில் 3 ஊசிகளைச் செலுத்தியுள்ளனர்.

குழந்தைக்கு மற்றொரு ஊசி செலுத்த இருந்த நிலையில், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனையடுத்து செப்டம்பர் 21 ஆம் திகதி நிக்கவெரட்டிய மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது குழந்தைக்கு வெறிநாய் கடி நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையல், நேற்று முன்தினம் 23ஆம் திகதி குழந்தை மரணமடைந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்