நாடு முழுவதும் 02 ஆயிரம் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன

🕔 August 29, 2022

நாடு முழுவதிலும் உள்ள 2000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ,இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்தச் சங்கம் கூறியுள்ளது.

சந்தையில் முன்னர் 84 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கோதுமை மாவின் விலை தற்போது 350 ரூபாவாக உயர்ந்துள்ளது.

மொத்த சந்தையில் தற்போது 50 கிலோகிராம் கோதுமை மா மூடை ஒன்று 17,000 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்