ஜனாதிபதி மாளிகையில், ‘பெட்ஷீட்’ திருடியதாகக் கூறப்படுபவருக்கு விளக்க மறியல்

🕔 August 27, 2022

நாட்டில் அண்மையில் நடந்த மக்கள் போராட்டத்தின் போது கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் படுக்கை விரிப்பு (பெட்ஷீட்) ஒன்றை திருடியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நேற்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேக நபரை 2022 செப்டம்பர் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றி, சில நாட்கள் அதனை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்