புத்திசாலித்தனமற்ற போராட்டம் காரணமாகவே ரணில் ஜனாதிபதியானார்: ‘அரகலய’ மீது விமல் குற்றச்சாட்டு
புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்க காரணமான சம்பவங்களுக்கு ‘அரகலய’ (போராட்டம்) தான் காரணம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
மூலோபாயத் திட்டமும் புத்திசாலித்தனமும் இல்லாத போராட்டத்தின் காரணமாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகியுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டார்.
“அண்மைக்காலமாக இந்த இயக்கம் கட்டவிழ்த்து விட்ட வன்முறைகள் – நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனதில் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியுள்ளது. அதனாலேயே ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர்கள் வாக்களித்தனர்” எனவும் அவர் தெரிவித்தார்.