மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார்

🕔 May 2, 2022

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதிர்வரும் புதன் கிழமை (04) நாடாளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தி விட்டு அவர் பதவி விலகவுள்ளார்.

அரசாங்கத்துக்குள் நடந்த பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர், பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அணியில் இருந்து விலகி, சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அணியுடன் இன்று முற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது மகிந்த ராஜபக்சவின் இந்த முடிவு தொடர்பாக பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சாராத ஒருவரை பிரதமராக தெரிவு செய்யுமாறும் பசில் ராஜபக்ஷ யோசனை முன்வைத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்