இலங்கை முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை நாளை கொண்டாடுகின்றனர்
புனித நோன்புப் பெருநாளை நாளைய தினம் (03) இலங்கை முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர்.
நேற்றைய தினம் ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்படாத காரணத்தினால், இன்று நோன்பு நோற்று, நாளை பெருநாளை முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர்.
இதன்படி இம்முறை இலங்கை முஸ்லிம்கள் 30 நோன்புகளை நோற்றுள்ளனர்.
நாடு மிகப்பெரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் நோன்புப் பெருநாளை மக்கள் எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.