லிட்ரோ எரிவாயு விலை நள்ளிரவு தொடக்கம் அதிகரிக்கிறது

🕔 April 26, 2022

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கிணங்க இன்று (26) நள்ளிரவில் இருந்து விலை அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 4,860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எரிவாயு விலையை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை அமெரிக்க டொலரின் தற்போதைய விகிதத்திற்கு ஏற்ப 5,500 ரூபாவாகும்.

தற்போதுள்ள விலைகளின் அடிப்படையில் எரி வாயுவை விற்பனை செய்வதன் மூலம் தினமும் 250 மில்லியன் ரூபாவை தாம் இழப்பதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்