நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்: வீரசுமன எம்.பி

🕔 April 16, 2022

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 225 உறுப்பினர்கள் உட்பட அனைத்து அரசியல்வாதிகள மற்றும் அதிகாரிகள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரித்துள்ளார்.

அந்தக் கணக்காய்வு தன்னிடமிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அனைவரும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தவறிழைத்தவர்கள் அடையாளம் காணப்படுவார்களாயின், அவர்களின் அனைத்து சொத்துக்களையும் மீளவும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்