இலங்கை பொருளாதார நெருக்கடி: உதவ முன்வந்துள்ள இந்திய பிச்சைக்காரர்
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவியாக, பிச்சையெடுத்து பெற்ற 20,000 இந்திய ரூபாயை வழங்க, இந்தியாவிலுள்ள ஏழை ஒருவர் முன்வந்துள்ளார்.
குறித்த நபர் தூத்துக்குடி – ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பூல்பாண்டியன் எனத் தெரியவந்துள்ளது.
பிச்சை எடுப்பதன் மூலம் அவர் பெறும் பணத்தைச் சேமித்து, நல்ல காரியங்களுக்கு நன்கொடையாக வழங்குவதில் அவர் புகழ்பெற்றவர்.
முன்னர், கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு தனது சேமிப்பிலிருந்து 10,000 ரூபாயை பலமுறை வழங்கியுள்ளார்.
பூல்பாண்டியன் தனது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட இதுவரை 400,000 ரூபாய்க்கு மேல் வழங்கியுள்ளார்.
இலங்கைக்கு இவர் வழங்க முன்வந்துள்ள 20 ஆயிரம் இந்திய ரூபாய், இலங்கை நாணய மதிப்பில் 83 ஆயிரம் ரூபாவுக்கும் அதிக தொகையாகும்.