உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு சஊதி அரேபிய தூதரகம் தமது பிரஜைகளுக்கு அறிவிப்பு

🕔 February 13, 2022

க்ரைனில் உள்ள சஊதி அரேபிய பிரஜைகள், உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு உக்ரைன் தலைநகர் கிய்வில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

உக்ரைனில் இருந்து உடனடியாக புறப்படுவதற்கு வசதியாக சஊதி தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் தூதரகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், ரஷ்ய படையெடுப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் காரணமாக, உக்ரைனுக்கு செல்ல விரும்பும் சவூதி அரேபியர்கள், தங்கள் பயணத்தை ஒத்திவைக்குமாறு தூதரகம் கூறியுள்ளது.

எல்லையில் ரஷ்யா 01 லட்சம் துருப்புக்களைக் குவித்துள்ள போதிலும், உக்ரைன் மீது படையெடுப்பதற்கான திட்டத்தை ரஷ்யா மறுத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்