பொது இடங்களில் கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் காலம் குறித்து தெரிவிப்பு

🕔 December 19, 2021

பொது இடங்களுக்குச் செல்லும்போது கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், பொது இடங்களுக்குச் செல்லும் போது கொவிட் தடுப்பூசி அட்டையை கொண்டு செல்வதனை கட்டாயமாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

சுகாதார அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொவிட் தடுப்பு குழுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசி போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்