பிரியந்தவின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

🕔 December 8, 2021
பிரியந்தவின் தாயார்

பாகிஸ்தான் – சியல்கோட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்த பிரியந்த குமார தியவதனவின் உடல் இன்று (08) அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் பிரியந்த குமார கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

பிரியந்தவின் உடலுக்கான இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான ராஜதந்திரிகள், அரசியல்வாதிகள் மற்றும் நண்பர்கள் அவரின் இல்லத்தில் இன்று பிரசன்னமாகியிருந்தனர்.

அவர் இவ்வாறு மரணமடைந்தமை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

பிரியந்தவின் சொந்த ஊரான கனேமுல்ல பிரதேசத்திலுள்ள பொல்ஹேன மயானத்துக்கு அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்