பிரியந்தவின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானம்

🕔 December 7, 2021

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

பாகிஸ்தானின் சியல்கோட் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராகப் பணியாற்றிய பிரியந்த குமார தியவதன வெள்ளிக்கிழமை (03) ஒரு கும்பலால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

பிரியந்தவின் குடும்பத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவித்தொகை வழங்குவதற்கான யோசனையை தொழில் அமைச்சர் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்தார்.

பிரியந்த குமாரவின் மனைவி மற்றும் குழந்தைகளின் நலனுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊழியர் நலன்புரி நிதியத்தால் இந்த மானியம் வழங்கப்படவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்