ஆரம்பிக்கப்படாதிருந்த பாடசாலை வகுப்புகள் திங்கள் தொடங்கும்: அமைச்சரவை பேச்சாளர்
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (22) தொடக்கம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அலகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனே ஏனைய தரங்கள் அனைத்தும் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொவிட் தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டமை காரணமாக, மாணவர்களின் தமது பாடத்திட்டங்களை உரிமை காலப்பகுதிக்குள் நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.